தமிழக முதல்வர் மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, *100 பேச்சாளர்கள் 100 தலைப்புகளில் ஒரே தலைவரைப் பற்றி சொற்பொழிவாற்றிய “வாகைத் தலைவனுக்கு வாழ்த்தரங்கம்”* நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
பள்ளிக் கல்வித்துறை, செய்தி, விளம்பரம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ராஜ்மோகன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நடிகை ஜெயசித்ரா, இயக்குநர் வெங்கட் பிரபு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.













